நாட்கள்

 நாட்கள் கடந்து போகும் போது
திரும்பி பார்க்கும் ஆவலும் கூடவே வருகிறது ,
எதை காண திரும்புகிறேன் ?
எத்தனை முயன்றும் கை வராமல் போன 
தைரியங்களை எட்டிப்பிடிக்கவா ?
நாக்கு நுனி வரை  வந்து   
சொல்லாமல் முழுங்கின வார்த்தைகளை தேடியா?
திரும்பின பாதை முழுதும் உபயோகப்படுத்த தவறின 
செயல்களும் ,சொற்களும்  உயிரற்று பரவி கிடக்கிறது -
"இனி வரும் பாதையில் இந்த கொடுமைகளுக்கு இடமில்லை  "
எனக்குள்ளே  சொல்லும் நான் கழுத்தை திருப்பி 
முன் பக்கம் மட்டுமே பார்க்க பழகுகிறேன் 
என் முன்னால் விரிவது வீணாக்கப்படா  நாட்கள் எனும்  நம்பிக்கையில்!
 
 
 

 

 
 
 

Comments

Popular Posts