அன்னையர் தினம்

உன்னை  ஒரு தினத்தில்  நினைத்து
அதற்க்கு ஒரு பேரும்  கொடுத்து அதை ,
கொண்டாட முடியுமா என்று பார்த்தேன் -                                    
மிச்ச தினங்கள் எல்லாம் என்னை பார்த்து சிரித்தன !
எனக்கும் சிரிப்பு தான் வந்தது -
நினைவுகள்  மங்கி ,நீருடன் கலக்கும் பொழுதிலும்
எஞ்சிய  நினைவு உன்னையே பிரதிபலிக்கும் ,
உன்னை ஒரு நாளுக்குள் எப்படி கைது செய்வது ?

Comments

Popular Posts