கனவு காணும் நாக்குகள்

வார்த்தைகளை  அழகாக கோர்த்து 
உள்ளிருக்கும் எண்ணங்களை ,
சித்திர படைகளாக 
வெளியே அனுப்பி ,
எதிரே குடி இருக்கும் கண்களில் 
புரிதலை காணும் ஆசை -
நாக்கு  ஏனோ என்றுமே எதிரி ஆகவே சதி செய்கிறது .

பல்லாண்டு காலமாய் புரள முடியாத  நாக்கிற்கு       
சுதந்திரமாக அசையவும் தெரியாத போது ,
சித்திர படைகளின் இயக்கம் அசாத்தியம் ஆகவே எஞ்சுகிறது .

பூட்டிய அறைகளில் எப்போதும் எதோ ஒன்று அடக்கப்படுகிறது 
பூட்டிய வாய்களிலும் தான் .
கனவுகள் இதயத்திற்கும் மூளைக்கும் மட்டுமே என்ன சொந்தமா ?
நாக்குகள் கூட கனவு காணும் தேசம் இது !

Comments

Popular Posts